டெல்லி: போலீஸ் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. கண்ணீர் புகை குண்டு வீசியதுடன் தடியடி நடத்தியும் விவசாயிகளை போலீசார் விரட்டி அடித்துள்ளனர். அமைதியாக பேரணி நடத்துபவர்கள் மீது போலீஸ் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவதாக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.