பூமித்தாய் பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது..! கழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை: மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான தமிழக கலைச்செல்வங்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கழக முன்னோடியும் 103 வயதிலும் விவசாயம் செய்யும் பூமித்தாயுமான பாப்பம்மாள் அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கிடைத்துள்ளது. இது அவருக்கு மட்டுமல்ல, கழகத்துக்கும் கிடைத்திருக்கும் பெருமை. அடிக்கடி என்னை வந்து சந்திப்பவர் மட்டுமல்ல, கழக போராட்டங்களிலும் முன் நிற்பவர். அவருக்கும் பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஶ்ரீ விருது பெற்ற தமிழகக் கலைச்செல்வங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியரசு தின வாழ்த்து

ஏகாதிபத்திய வெள்ளையர்களால் ஆளப்பட்ட அடிமை அரசில் இருந்து விடுதலை பெற்று நமக்கு நாமே ஒரு குடியரசையும் சட்டத்தையும் உருவாக்கி ஆளத் தொடங்கிய நாள் ஜனவரி 26, குடியரசு தினம்; இந்தியக் குடிமக்களின் தினம்.  இந்திய நிர்வாகம் என்பது ஜனநாயக - சமத்துவ - சகோதரத்துவ - அறநெறி விழுமியங்களுடன் செயல்படும் என்பதை நாம் உலகுக்குச் சொன்ன நாள் இது.  அதே நெறிமுறைகளுடன் எந்நாளும் வாழ்வோம்! நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள் எனவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: