சென்னை: தமிழக அரசின் அண்ணா பதக்கம் கால்நடை மருத்துவர் பிரகாஷூக்கு வழங்கப்படுகிறது. தருமபுரியில் கிணற்றில் விழுந்த யானையை மீட்டு சிறப்பான சிகிச்சை அளித்த பிரகாஷூக்கு அண்ணா பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் விபத்தை தடுக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் சுரேஷூக்கும் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. மத நால்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது கோவை அப்துல் ஐபாருக்கு வழங்கப்படுகிறது.