திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் வெளிமாநில பக்தர்கள், திருப்பதி நகருக்குள் வரும்போது ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பதற்காக நகருக்கு வெளியே பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருச்சானூரிலிருந்து கபில தீர்த்தம் வரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திருப்பதி மாநகராட்சி சார்பில் கருட மேம்பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் பாலத்தின் இணைப்பு கட்டுமானங்களை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.