புதுடெல்லி: நாட்டின் 72வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாவது: கொரோனா பாதிப்பை தொடர்ந்து பல கட்டங்களாக கொண்டுவரப்பட்ட தளர்வுகளானது நாட்டின் பொருளாதாரத்துக்கு நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்கள் விரைவாக தொடர்கின்றன. அரசு விவசாயிகளின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை.