பெங்களூரு: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா தற்கொலை செய்து கொண்டார். கன்னட திரையுலகில் பிரபலமான நடிகை ஜெயஸ்ரீக்கு அவ்வளவாக திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதில் விரக்தியடைந்து காணப்பட்டார். பல முறை நண்பர்களிடம் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லையென்று புலம்பினார். சமீபத்தில் நடிகை ஜெயஸ்ரீ பிரகதிலே அவுட்டில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.