புதுடெல்லி: தடுப்பூசி குறித்து பொய்யான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும்பணி கடந்த 16ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போடுவதால் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும், உடல்நலக்கோளாறு, பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியானபடி இருக்கின்றது.