வாஷிங்டன்: ஒரே நேரத்தில் 143 செயற்கைகோள்களை ஏவி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் புதிய உலக சாதனை படைத்துள்ளது.
விண்வெளித் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமான அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது பால்கன்-9 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 143 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. புளோரிடா மாகாணம் கேப் கேனவரல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட் மூலம் 143 சிறியரக செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டன.