×

அத்திபள்ளியில் தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாடு

பெங்களூரு: கர்நாடக கிறிஸ்தவ சேனை, கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம், தேசபிரேமிகளா சேனை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதில் கலந்து கொள்கின்றனர். தங்களின் சுயலாபத்திற்காக கன்னடர் மற்றும் தமிழர் இடையே பகையை  ஏற்படுத்தி அதில் குளிர் காயும் சில சுயநல அமைப்பினரை பற்றி பொதுமக்களிடம்  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி  நடைபெறுகிறது. தமிழக கர்நாடக எல்லையான அத்திபள்ளியில் இரண்டு  மாநில போலீசார் ஒத்துழைப்புடன் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதில்  அனைவரும்  கலந்து கொள்ளவேண்டும் என்று அவ்வமைப்பின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil-Kannada Unity Conference ,Attipalli , Tamil-Kannada Unity Conference at Attipalli
× RELATED அத்திப்பள்ளி பட்டாசு கடை வெடி...