நொய்டா: கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 706 கோடியில் பல்வேறு நல திட்டங்களை துவக்கி வைத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நிதி தலைநகர் என மாவட்டத்திற்கு அப்போது பாரட்டும் தெரிவித்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் உதயமான 71வது ஆண்டு நேற்று அம்மாநிலத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கவுதம் புத்தா நகர் மாவட்டத்திலும் கொண்டாட்டம் களை கட்டியது. அதையடுத்து, மாவட்டத்தில் குடியரசு தின விழா இன்று கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதன் பிறகு மாவட்டத்தில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கி வைப்பார் என காவல்துறை எஸ்.பி இரு தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.ஆனால், 71வது ஆண்டு கொண்டாட்டத்தில் கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் 706 கோடியில் 66 நலத் திட்டங்களை தலைநகர் லக்னோவில் இருந்து வீடியோ கான்பரன்சிங்கில் தொடங்கி வைத்து மாவட்ட மக்களுக்கு முதல்வர் யோகி இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.