புதுடெல்லி: கடும் பனியிலிருந்து மெதுவாக மீண்டு வந்த டெல்லியில், குளிரின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மண்டல இயக்குநர் எச்சரித்துள்ளார். வரலாறு காணாத பனிப்பொழிவை மாத தொடக்கத்தில் டெல்லி சந்தித்தது. ஜனவரியில் உத்தேசமாக 12 டிகிரி செல்சியஸ் என குறைந்தபட்ட வெப்பநிலை நீடிப்பது இயல்பான வானிலையாகும். ஆனால், நடப்பாண்டில் அதுவே 1.0 டிகிரி செல்சியசாக மிகவும் தாழ்ந்து, தண்ணீரை உறைபனியாக்கும் நிலையை ஏற்படுத்தியது. குளிரின் கடுமையால் வெளியில் தலைகாட்டவும் மக்கள் அச்சப்பட்டனர்.இரு வாரங்களுக்கு 3 அல்லது 4 டிகிரி என நீடித்த குறைந்தபட்ட வெப்பம், கடந்த ஒரு வாரமாக 8 டிகிரிக்கு அதிகரித்ததால், பனியின் தாக்கம் குறைகிறது என வானிலை மையத்தின் மண்டல இயக்குநர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார்.