சண்டிகர்: லூதியானாவில் காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங் பிட்டு, சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் சிலரால் தாக்கப்பட்டார். டெல்லியின் எல்லையில் விவசாயிகள் ேபாராட்டம் நடத்தி வரும் நிலையில், சிங்கு எல்லையில் உள்ள குருதேக் பகதூர் நினைவு சின்னம் இருக்கும் இடத்திற்கு பஞ்சாப் மாநிலம் லூதியானா காங்கிரஸ் எம்பி ரவ்னீத் சிங் பிட்டு வந்தார். அப்போது அவரை சிலர் தாக்கினர். இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பதிவில், ‘குருதேக் பகதூர் நினைவு சின்னம் இருக்கும் இடத்திற்கு அருகே நான் சென்ற போது அங்கிருந்த சிலர், என்னை தள்ளிவிட்டனர். எனது தலைப்பாகையை இழுத்தனர். அப்போது எனது தலைப்பாகை கீழே விழுந்தது.