கொடைக்கானல்: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். வார விடுமுறையான நேற்று, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருந்தது. கொடைக்கானல் நகர் மத்தியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள், தொடர்ந்து வெள்ளி நீர்வீழ்ச்சி, பிரையன்ட் பூங்கா, பைன் பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர்.