சிவகங்கை: கை வேலைப் பாட்டுடன் கூடிய மெல்லிய மெத்தை தைக்கும் போட்டியில் சர்வதேச அளவில் முதலிடம் பிடித்து நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி பள்ளி மாணவி சாதனை படைத்தார். பள்ளி மாணவர்கள் கொரோனா காலத்தை பயனுள்ள வகையில் செயல்படுத்தும் விதமாக குயில்ட் இந்திய அறக்கட்டளை சார்பில் 2021ம் ஆண்டிற்கான சர்வதேச அளவிலான கை வேலைப் பாட்டுடன் கூடிய மெல்லிய மெத்தை தைக்கும் போட்டி சென்னையில் நடைபெற்றது.
இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 288 பேர் பங்கேற்றனர். நாட்டரசன்கோட்டை கே.எம்.எஸ்.சி. அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 11 பேர் பங்கேற்றனர்.