சென்னை: சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து. அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.