ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள நிலாவூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள்(16) பிளஸ் 1 படித்து வருகிறார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார்(25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நிலாவூர் பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை கடந்த 18ம் தேதி இரவு ராஜ்குமார், ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் ராஜ்குமார் மற்றும் மைனர் பெண்ணை தேடிவந்தனர்.