புதுடெல்லி: மக்கள் பண வீக்கத்தினால் சிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி அரசு வரி வசூல் செய்வதில் மும்முரமாக இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகின்றார். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வானது எப்போதும் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஒரே வாரத்தில் நான்காவாது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.