யானை மிதித்து பேராசிரியை பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கண்ணூரை சேர்ந்தவர் ஷஹானா சதர் (26). கோழிக்கோடு தாரு நூஜூம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியல் துறை தலைவராக பணியாற்றி வந்தார். வயநாடு கல்பெட்டா வனப்பகுதிக்கு இவர் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு உள்ள ரிசார்ட் கூடாரம் ஒன்றில் 2 உறவினர்களுடன் தங்கி இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் ஷஹானா சதர் வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென அங்கு  வந்த காட்டு யானை ஷஹானா சதரை பிடித்து தரையில் போட்டு மிதித்து கொன்றது. 

Related Stories: