புதுடெல்லி: ‘கொரோனா தடுப்பூசி வழங்குவதில் விமான போக்குவரத்து ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும்,’ என்று மத்திய அரசுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதியன்று மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதலின்படி சுகாதாரத்துறை, முன்களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டது. இந்த முன் களப்பணியாளார்கள் பட்டியலில் விமான போக்குவரத்து ஊழியர்களையும் சேர்க்கும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.