ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி சரளா நகரை சேர்ந்தவர் ராஜன்(34). அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சூபர்வைசராக வேலை செய்து வருகிறார் வீட்டின் மாடியில் தனியார் தொழிறசாலையில் வேலை செய்யும் 2 பெண்கள் தங்கியுள்ளனர். இரண்டு வீடுக்கும் ஒரே பாத்ரூம்தான் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜன் மனைவி தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். ராஜன் மட்டும் தனியாக இருந்துள்ளார். மேலும், ராஜன் காலையில் சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு. வெளியே வரும்போது குளியல் அறையில் செல்போன் விடியோவை ஆன் செய்து விட்டு வருவான். பிறகு, பெண்கள் குளித்துவிட்டு வந்த பிறகு. குளியல் அறைக்கு சென்று தன் செல்போன் ஆன் செய்து, காட்சிகளைப் பார்த்து ரசித்து வந்தது வாடிக்கையாக நடந்துள்ளது.