சென்னை: தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கோரும் விஷயத்தில் அரசியல் முடிவு எடுப்பதற்காக பாமக நிர்வாககுழு அவசரக் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு இணையவழியில் நடைபெறும் என்று பாமக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காதபட்சத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பாமக மூத்த தலைவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.