கொரோனா தடுப்பூசி 9வது நாளில் 2,494 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர்: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் 9வது நாளான நேற்று 2,494 பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ஒட்டுமொத்தமாக மாநில அளவில் இதுவரை 61,720 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி குறித்து மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், பயத்தை போக்கும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அதன்படி, கோவிஷீல்டு 2,404 பேருக்கும், கோவேக்சின் 90 பேருக்கும் என மொத்தம் நேற்று 2,494 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 9 நாட்களில் கோவிஷீசீல்டு, கோவேக்சின் என இரண்டு தடுப்பூசிகளும் 61,720 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சுகாதார துறையின் அறிக்கையின்படி 9வது நாளில் தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: