சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கடும் கட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் தினசரி 300க்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கும் நிலைதான் உள்ளது. இந்த சூழ்நிலையில், இங்கிலாந்தில் உருவாகியுள்ள வீரியமிக்க கொரோனா தொற்று உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால், 12வது கட்டமாக வரும் ஜனவரி 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பாதிப்ைப கட்டுக்குள் முழுவதுமாக கொண்டு வரப்படவில்லை.