புதுடெல்லி: பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை மேலும் மோசமடைந்ததால், டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் தேஜஷ்வி தெரிவித்தார். மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான லாலு பிரசாத்துக்கு (72) பல்வேறு உடல் உபாதைகள் உள்ளன. இதனால் அவர் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக மூச்சுத் திணறலாலும் நிமோனியா காய்ச்சலாலும் அவதிப்பட்ட நிலையில் லாலுவின் உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.