திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணிகளுக்கு மாலையில் பரிசு வழங்கப்படுகிறது. திருவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப் பள்ளியில் கடந்த இரு தினங்களாக மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மூன்றாவது நாளான இன்று இறுதிப்போட்டி நடைபெறுகிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மாலையில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.