செய்துங்கநல்லூர்: முறப்பநாடு அகரத்தைச் சேர்ந்தவர் சப்பாணி(65). இவர் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் பொங்கலுக்கு மறுநாள் மேய்ச்சலுக்கு சென்ற அவரது பசுமாடு வீடு திரும்பவில்லை. இதையடுத்து சப்பாணி மாட்டை தேடி சென்றார். மழை காரணமாக மாட்டைத் தேட முடியவில்லை. ஒரு வாரமாகியும் மாடு வராததால் நேற்று முன்தினம் அகரம் பகுதியில் தேடி சென்ற போது மாடு மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது தெரியவந்தது. இதேபோல் கடந்த மாதமும் 2 பசுமாடுகள் வயல்காட்டில் தாழ்ந்து சென்ற மின்கம்பியில் சிக்கி இறந்தது குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து மாட்டை இழந்த விவசாயியான சப்பானி கூறும்போது, மின்ஊழியர்களின் அலட்சியத்தால் இதேபோல அடிக்கடி மின்சாரம் தாக்கி கால்நடைகள் பலியாகின்றன.