ஊட்டி: பராமரிப்பு பணி காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்கா சிறிய புல் மைதானத்திற்குள் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை சீசன் நெருங்கிய நிலையில், அனைத்து பூங்காக்களையும் தயார் செய்யும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் நாற்று நடவு, புல் மைதானம் சீரமைப்பு, குளங்கள் சீரமைப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், இம்மாதம் துவக்கம் முதல் கடந்த வாரம் வரை ஊட்டியில் எந்நேரமும் சாரல் மழை பெய்து வந்தது. இதனால், பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் அனைத்தும் பழுதடைந்தன.