ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சைக்ளமின் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்து வருகிறது. மே மாதம் நடக்கவுள்ள மலர் காட்சிக்காக தற்போது தாவரவியல் பூங்காவை மேம்படுத்தும் பணிகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, பூங்காவில் தற்போது நாற்று நடவு பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், குளங்களில் உள்ள ஆகாயத்தாமரை மற்றும் அல்லிச் செடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புல் மைதானங்களும் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால், பூங்காவில் மலர்கள் இன்றி புல் தரைகளும், செடி கொடிகள் மட்டுேம தற்போது காட்சியளிக்கிறது.