சென்னை: சென்னை, கோட்டூர், நாயுடு தெருவை சேர்ந்த ரங்கபாபு. இவர் நேற்று வேப்பேரி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் மேற்கண்ட முகவரியில் கடந்த மூன்று வருடமாக வசித்து வருகிறேன். இங்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இரண்டாம் தளத்தில் நடிகர் விஷ்ணு விஷால் குடிவந்தார். அவர் அங்கு வந்த நாளிலிருந்து தினமும் இரவில் குடித்து விட்டு மிகவும் மோசமான வகையில் நடந்து கொள்கிறார். தினமும் இரவில் குடித்துவிட்டு பல ஆண் நண்பர்களுடனும், பெண்களுடனும் வீட்டுக்கு வருவதும், அதிக அளவில் ஒலி எழுப்பும் வகையில் பாடல்கள் போட்டு கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.நேற்று முன்தினம் இரவும் அதேபோல அவர் நடந்துகொள்ள இரவு 10.30 மணியளவில் பல ஆண் மற்றும் பெண் நண்பர்களுடன் அங்கு வந்து குடித்துவிட்டு இரவு 1.30 மணியளவில் அதிக சவுண்ட் வைத்து தொந்தரவு செய்து கொண்டிருந்தார்.