கோவை: கோவையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று குறுந்தொழில்முனைவோருடன் ராகுல்காந்தி கலந்துரையாடினார். அப்போது, ராகுல்காந்தி முன்னிலையில் சென்ைனயில் இருந்து வந்த குறுந்தொழில்முனைவோர் கே.இ.ரகுநாதன் பேசியதாவது: நான், 35 வருடமாக குறுந்தொழில்முனைவோராக உள்ளேன். 3,500 குறுந்தொழில் முனைவோர் அடங்கிய சங்கம் சார்பில் இங்கு பேச வந்துள்ளேன். இன்றைய தொழில்துறை நிலை என்ன? ஸ்கில் இந்தியா, மேக்கின் இந்தியா, டிஜிட்டில் இந்தியா எல்லாம் இன்றும் தலைகீழாக மாறிவிட்டது. இவற்றில் இருந்து புறம்தள்ளப்பட்டு விட்டோம். 7 கோடி தொழில்முனைவோர்களில் இன்று 30 சதவீதம் பேர் தங்களது தொழிலை கைவிட்டுவிட்டு ெவளியேறி விட்டனர். அதாவது, 2.10 கோடி பேர் இத்தொழிலை கைவிட்டு விட்டனர்.