காஞ்சிபுரம்: வாக்காளர் பட்டியலில் அதிமுகவினர் தூண்டுதலால் திமுக தொண்டர் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.
கடந்த 1.1.2021 தேதியை தகுதி நாளாக கொண்டு திருத்தம் செய்து, இறுதி வாக்காளர் பட்டியலைகடந்த 20ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி காஞ்சி வடக்கு மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், பல்லவரம், தாம்பரம், செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் அந்தந்த பகுதி - ஒன்றிய - நகர - பேரூர் செயலாளர்களுக்கு பிரித்து உடனே வழங்கப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று ஆய்வு செய்து, படிவம் 6, 6ஏ, 7, 8, 8ஏ ஆகிய படிவங்கள் மூலம் சேர்த்தல் / நீக்கல் / திருத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளதா ? என்பதை சரிபார்த்து, குறைகள் ஏதேனும் இருந்தால், அதனை ஆதாரத்துடன் வரும் 25ம் தேதிக்குள் மாவட்ட அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.