அபுதாபி: அபுதாபியில் ஜன.28ம் தேதி முதல் பிப்.6ம் தேதி வரை 10 ஓவர்கள் அடிப்படையிலான டி10 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அதில் விளையாட உள்ள அணிகளில் கிறிஸ் கேல், ஷாகித் அப்ரிடி, கைரன் போலார்டு, டுவைன் பிராவோ, சோயிப் மாலிக் உட்பட உலகின் முன்னணி வீரர்கள் களம் காண உள்ளனர். இந்த 4வது சீசனில் அபுதாபி அணிக்காக களம் இறங்க உள்ள கிறிஸ் கேல், ‘போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதிக எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் இருக்கிறேன். அந்தப் போட்டியில் மிகப்பெரிய ஷாட்களை அடித்து நொறுக்க காத்திருக்க முடியவில்லை. எப்போது தொடங்கும் என்ற நிலையில் இருக்கிறேன். இந்த சீசன் கட்டாயம் தரமான பொழுதுபோக்காக அமையும்’ என்று கூறியுள்ளார்.