சொல்லிட்டாங்க...

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கொல்கத்தா தான் நாட்டின் தலைநகராக இருந்தது. நமது நாட்டிற்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும். - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

பிரதமர் மோடி, தமிழ்மக்களை இரண்டாம் தர குடிமக்களாக கருதுகிறார். தமிழ் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறைபற்றி அவர் அறியவில்லை. - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

இனி பிஎச்டி ஆய்வுப் படிப்பை முடித்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருப்பது அநீதியாகும். - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழகத்தில் மோடி மீதான கோபம் எம்பி தேர்தலில் எதிரொலித்தது. தற்போது மிக அதிகமான அதிருப்தியில் மக்கள் உள்ளனர். இது சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்.- தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன்

Related Stories: