சென்னை: கிராமசபை கூட்டத்தை நடத்த அதிமுக அரசு முன்வரவில்லை என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் அருகே அடையாளம்பட்டில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் இருக்கும் போது தொடர்ந்து கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டு வந்ததாக தெரிவித்தார்.