இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 2 மீனவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு..!!

ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களில் 2 மீனவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் புதுக்கோட்டை கொட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகம் கொண்டுவரப்பட்டது. செந்தில்குமார், நாகராஜ் ஆகிய 2 மீனவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை பிடித்து சென்று அடித்து கொன்றதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: