ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை!: காவல்துறையினரால் மீட்கப்பட்ட நகைகளின் வீடியோ வெளியீடு..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் முத்தூட் நிதி நிறுவன கொள்ளை தொடர்பாக காவல்துறையினரால் மீட்கப்பட்ட நகைகளின் வீடியோ வெளியானது. ரூபாய் 12 கோடி மதிப்பிலான நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். ஐதராபாத் அருகே சம்சாத் பூர் என்ற இடத்தில் அதிகாலையில் சுற்றி வளைத்து தமிழக தனிப்படை போலீசார் கைது செய்தனர். கொள்ளையர்களிடமிருந்து 7 துப்பாக்கிகள், கத்தி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: