சென்னை: தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் முன் ஆடிட்டர் குருமூர்த்தி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. துள்ளக் ஆண்டு விழாவில் நிதித்துறை பற்றி அவதூறாக பேசியதாக ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அரசு தலைமை வழக்கறிஞரிடம் மூத்த வழக்கறிஞர் துரைசாமி புகார் அளித்து இருந்தார். புகாரை அடுத்து பிப். 16-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு குருமூர்த்திக்கு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.