கோபால்பட்டி: சாணார்பட்டி ஒன்றியத்தில் மா மரங்களில் பூத்துள்ள பூக்கள் உதிராமல் இருக்க, மருந்து அடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு விளைச்சல் அதிகரிக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சாணார்பட்டி ஒன்றியத்தில் உள்ள வேம்பார்பட்டி, அஞ்சுகுழிப்பட்டி, கோட்டை, தவசி மடை கணவாய்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாந்தோப்புகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதியில் விளையும் உயர்தர அல்போன்ஸா, பங்கனப்பள்ளி உள்ளிட்ட மாம்பழங்களை வெளி மாவட்டங்களுக்கும், வெள் மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்புகின்றனர். இந்நிலையில், இந்தாண்டு காலம் தவ றிபெய்த மழையினால், முதலில் பூத்த பூக்கள் அனைத்தும் உதிர்ந்துவிட்டன. தற்போது இரவில் பனிப்பொழிந்து, பகலில் நல்ல வெயில் அடிப்பதால், மா மரங்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.