மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும்!: ரிசர்வ் வங்கி

கர்நாடகா: மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மங்களூருவில் மாவட்ட வங்கிகள் இடையேயான ஆலோசனை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி பொதுமேலாளர் மகேஷ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் பெறப்பட்டு புதிய ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் என தெரிவித்தார். பணமதிப்பிழப்புக்கு பிறகு 2019ல் அறிமுகப்படுத்தப்பட்ட ஊதா நிற ரூ.100 நோட்டுகளை திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: