விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற சசிகலா சம்மதம்!: மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா

பெங்களூரு!: விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளார் என மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை சசிகலாவுக்கு அளிக்கப்படுகிறது. ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 95 சதவீதத்திலிருந்து 98 சதவீதமாக அதிகரித்துள்ளது. தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் கோரிக்கையை நிராகரித்தது உண்மைதான். விக்டோரியா மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருக்கிறது என்று தலைமை மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா விளக்கமளித்துள்ளார்.

Related Stories: