சிதம்பரம்: சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அரசு கல்லூரிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணத்தையே வசூலிக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 45 நாட்களாக போராடும் மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றியதாக குற்றச்சாட்டும் முன்வைத்துள்ளனர். மருத்துவ, பல் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 1,300 பேருக்கு உணவு, குடிநீர் தரவில்லை எனவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.