வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவிப்பு: மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்கள் நடைபெற்ற ஐடி சோதனை நிறைவு.!!!

சென்னை: பிரபல கிறித்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்துள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த பிரபல கிறிஸ்துவ மதபோதகர் பால் தினகரன், இயேசு அழைக்கிறார் மத பிரச்சார கூட்டம், காருண்யா பல்கலைக்கழகம், பள்ளி நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, இயேசு அழைக்கிறார் குழுமம் வரி ஏய்ப்பு செய்ததா எழுந்த புகாரின் அடிப்படையில், பால் தினகரனக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, அடையார், கிரீன்வேஸ் சாலை, தாம்பரம், வானகரம், கோவை உள்ளிட்ட ‘இயேசு அழைக்கிறார்’ பிரச்சார கூடங்கள் மற்றும் கோவையில் உள்ள காருண்யா பல்கலைக்கழகம், பால் தினகரன் வீடு மற்றும் அவரது அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 28 இடங்களில் 3வது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், 3 நாட்களாக 28 இடங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனையில் நிறைவடைந்துள்ளது. சோதனையில், இயேசு அழைக்கிறார் அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதியை குறைத்து கணக்கு காட்டியும், வெளிநாடு நிதியை இரண்டு விதமான கணக்குகள் மூலம் பராமரித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்  மூலம் பல கோடிக்கு பால் தினகரன் மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது.

மேலும், பொதுமக்கள் அளிக்கும் காணிக்கை மற்றும் நன்கொடைகளை அறக்கட்டளை மூலம் வரவு வைத்து அந்த நிதியை பயன்படுத்தி வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்ததற்கான ஆவணங்கள் பால் தினகரன் பயன்படுத்திய  இ-மெயில் மூலம் கண்டுபிடித்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் 2021ம் ஆண்டின் மிகப்பெரிய சோதனையாக இது கருதப்படுகிறது. பால் தினகரன் தற்போது கனடாவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். எனவே, கனடாவில் உள்ள பால் தினகரனை சென்னைக்கு வர வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பால் தினகரனை சென்னை வந்ததும் சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நேரடியாக விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: