காஞ்சிபுரம்: வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (34). காங்கேயநல்லூரை சேர்ந்தவர் தீபா (30). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இவர்கள், காதலித்து திருமணம் செய்து கொண்டனர். காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கையில் வாடகைக்கு வீட்டில் குடும்பம் நடத்தினர். இவர்களுக்கு 2 வயது மற்றும் 7 மாதத்தில் 2 குழந்தைகள் உள்ளன். ஆனந்தராஜ் அதே பகுதியில் உள்ள சிக்கன் சென்டரில் வேலை செய்கிறார். கொரோனா காரமணாக கடந்த 7 மாதமாக ஆனந்த்ராஜிக்கு வேலை இல்லை. இதனால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் கடும் சிரமம் அடைந்தனர். இதில் 7 மாத குழந்தைக்கு காது கேட்காத பிரச்னை ஏற்பட்டது. அதன் மருத்துவ செலவுக்கும் பணம் இல்லாமல் வேதனையில் இருந்தனர். இதையொட்டி கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.