சென்னை: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் காட்டுப்பள்ளியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின்படி தனியார் நிறுவனத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, இந்த விரிவாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய அருகில் வசிப்பவர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், மாசுகட்டுப்பாட்டு வாரியம் கருத்துக்கேட்பு கூட்டத்தை பொதுமக்கள் எளிதில் சென்று வர முடியாத 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மீஞ்சூரில் நடத்துவதாக அறிவித்துள்ளது.