முத்தரசன் வலியுறுத்தல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்

சென்னை: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உட்பட ஏழு பேரும் சுமார் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து விட்டனர். இவர்களின் நீண்ட கால சிறைவாசத்தை கருத்தில் கொண்டும்,  குடும்பத்தாரின் வேண்டுகோளை ஏற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது தமிழகமக்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாகும்.

இந்நிலையில் உச்ச மன்றத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய புலானாய்வுத் துறையின் பன்நோக்கு மற்றும் கண்காணிப்புக் குழுவின்  விசாரணைக்கும், ஆளுநர் முடிவெடுப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆளுநர் ஏழு பேர் விடுதலை குறித்த முடிவெடுப்பதில், மேலும் இழுத்தடிக்காமல்  பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர்களையும் உடனடியாக விடுதலை செய்ய  வேண்டும்.

Related Stories: