பல்லாவரம்: ஜமீன் பல்லாவரம் திருவிக தெருவை சேர்ந்தகோபாலகிருஷ்ணன் (43), நேற்று பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், நேற்று முன்தினம் இரவு எனது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகைகள், 3.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ₹50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறியிருந்தார். விசாரணையில், பல்லாவரம் குளத்து மேடு 5வது தெருவை சேர்ந்த கார்த்திக் (22), ஜமீன் பல்லாவரம் பாரதி நகர் பிரதான சாலையை சேர்ந்த சஞ்ஜய் (19) மற்றும் பல்லாவரம் அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுவன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.