புழல்: பாடியநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் குடுமிப்பிடி சண்டையால் சான்றிதழ் வாங்க வந்த மக்கள் குழப்பமடைந்தனர். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம அலுவலராக ராமலட்சுமி கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி மூன்று ஆண்டுகள் பணியாற்றியவர்களை அரசு இடமாற்றம் செய்து வருகிறது. இந்நிலையில், பொன்னேரி கோட்டாட்சியர் செல்வம் கடந்த 31.12.2020 அன்று ஆட்டந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் ஜாகிர் உசேன் மற்றும் சோழவரம் கிராம நிர்வாக அலுவலர் பூபாலன் ஆகியோரை பாடியநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு ஒரே நேரத்தில் பணிமாற்றம் செய்து உத்தரவிட்டார்.