கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி ஆந்திர எல்லையில் தோக்கமூர் ஊராட்சிக்கு உட்பட்ட தமிழக பகுதி உள்ளது. இங்கு ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த இடத்தில் இருந்து சுமார் 4.கி.மீ. தொலைவில் உள்ள காரூர் என்ற ஆந்திர பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 1000 பேர் இந்த டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.