சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் ஜன.28ம் தேதி மக்கள் பார்வைக்கு திறப்பு..!!

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் வருகின்ற 28ம் தேதி மக்கள் பார்வைக்கு திறக்கப்படவுள்ளது. ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார். வேதா இல்லத்தில் ஜெயலலிதா விரும்பி படித்த புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்கள் காட்சிக்கு இடம்பெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Stories: