2020ம் ஆண்டு சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான மாநில விருதுகள் அறிவிப்பு..!!

டெல்லி: 2020ம் ஆண்டுக்கான சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட சிறந்த தேர்தல் அலுவலர்களாக திருச்சி ஆட்சியர் சிவராசு, விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி ஆட்சியர்  கிரண் குர்ராலாவும் மாவட்ட சிறந்த தேர்தல் அலுவலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர் மேகநாத ரெட்டிக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பதிவு சிறந்த அதிகாரிகளாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிரதாப், பவன்குமார், பத்மஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: